கொல்கத்தா, மே 11- இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டையொட்டி கொல்கத்தா களைகட்டியுள்ளது. மாநாட்டை சிறப்பிக்கும் விதமாக மாநாடு நடைபெறவுள்ள சால்ட்லேக் பகுதி முழுவதும் கிட்டத்தட்ட 20,000 வெண்கொடிகள் மற்றும் உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரான மர டோனாவின் புகைப்படம் தாங்கிய 40 பேனர்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 11-ஆவது அகில இந்திய மாநாடு மேற்கு வங்கத்தில் கொல்கத்தா வை ஒட்டியுள்ள சால்ட்லேக்கில் மே 12-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பங்கேற்கும் 550 பிரதிநிதிகளை வரவேற்கும் விதமாக முன்னதாகவே கலை நிகழ்வுகள், பேரணிகள் தொடங்கியுள்ளன.
ஹவுரா கடம்தலாவில் துவங்கி தினேஷ் மஜ்ஜும்தார் பவன் வரை யிலான மாரத்தான் போட்டி சனிக் கிழமையன்று நடைபெற்றது. மேற்கு வங்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத் தலைவர் மீனாட்சி முகர்ஜி போட்டியைத் துவங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், தற்போதைய இந்திய அரசியல் சூழலில் நாட்டின் ஒற்றுமைக்கும், அரசியலமை ப்புச் சட்டத்திற்கும் அச்சுறுத்தலுக்கு உட்பட்டு வருவதால் நல்லிணக்கத்தை உருவாக்கவே இந்நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கூறினார். சனிக்கிழமையன்று இரத்த தான முகாமும் தொடங்கியது. மாநாட்டு முன்னோட்ட நிகழ்வின் ஒரு பகுதியாக எண்ணற்ற திரைப்படங்களை திரை யிடும் நிகழ்வை புகழ் பெற்ற இயக்குநர் தருண் மஜ்ஜும்தார் முன்னிலையில் திரைக்கலைஞர் சப்யசாச்சி சக்ர வர்த்தி தொடங்கி வைத்தார். இதில் ஜெய்பீம் திரைப்படம் திரையிடப் பட்டது.
மேலும் சௌரவ் பலோதி அவர்களால் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. மாநாட்டு நிகழ்வுகளுக்கு முன்னதாக பாலின சமத்துவத்தை வலி யுறுத்தும் 100க்கும் மேற்பட்ட சுவர் ஓவியங்கள் வாலிபர் சங்க தோழர்களால் வரையப்பட்டிருக்கின்றன. மாநாட்டு செய்தியை பரப்பும் விதமாக மாநிலம் முழுவதும் ஏராள மான பேரணிகள் மற்றும் அணி வகுப்புகள் நடத்தப்பட்டு இருக்கின்றன. மாணவர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கத்தின் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். சத்யஜித்ரேவின் ஞானசத்ரு என்ற திரைப்படம் தகின் தாரில் உள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் திரையிடப்பட்டது. சால்ட் லேக் பகுதியில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பங்கேற்கும் பிரதிநிதிகளை வரவேற்கும் விதமாக 40 நுழைவாயில்கள் அமைத்திருக்கின்ற னர்.